Thursday, 25 July 2019

வண்ணதாசன்

நமக்கு வேண்டிய சிலபேரின் சிரிப்பு நமக்கு ஏதோ நல்லது பண்ணுகிறது...#வண்ணதாசன்

Wednesday, 24 July 2019

காட்டுவாசி மனிதன்

‏காடுகளை அழித்துக்கொண்டே மனிதன் காட்டுவாசியாக மாறிக்கொண்டு இருக்கிறான்...

Tuesday, 23 July 2019

பெண்கள்

தன்னுடைய சக்தியை உணராத யானை சின்ன சங்கிலிக்கும் குச்சிக்கும் பயப்படுவதுபோல், பெண்களும் தங்களின் சக்தியை உணராமல் இருக்கிறார்கள்


விதை

"எல்லாவற்றையும் மக்க செய்கிற மண் விதையை மட்டும் துளிர்க்க செய்கிறது "

விரும்புவது

விரும்புவதெல்லாம் 
இந்த மரத்தைப் போலவும் 
இந்தப் பறவையைப் போலவும் 
இந்த மிதிவண்டியைப் போலவும் 
இவ்வுலகில் வாழத் 
தகுதி பெற்றிருத்தல் 
ஒன்றே...

# தேவதேவன்#

Sunday, 21 July 2019

கபிலன்

உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்

அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

இதமாய் உன் இதயத்தில்
காத்திருப்பேன்
கனவே
கனவை உன் விழிகளாய்
பாத்திருப்பேன்
தினமே
மழையாய் என் மனதினில்
நீ விழுந்தாய்
விழுந்தாய்
ஒரு விதையான நான்
எழுந்தேன்

உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

விரலுக்கும்
இதழுக்கும்
பிறந்திட இசையென
இருவரும் இருப்போம்
இடம் பொருள் மறப்போம்

உனக்கென்ன எனக்கென்ன
முதலேது முடிவேது
எது வரை இருப்போம்
அது வரை பிறப்போம்

யார் நீ யார் நான்
வான் நீ மீன் நான்
உலகின் கதவை தாழ்
திறப்போம்
உயிரே
மழலை மொழியாய்
மகிழ்ந்திருப்போம்

உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

இதமாய் உன் இதயத்தில்
காத்திருப்பேன்
கனவே
கனவை உன் விழிகளாய்
பாத்திருப்பேன்
தினமே
மழையாய் என் மனதினில்
நீ விழுந்தாய்
விழுந்தாய்
ஒரு விதையான நான்
எழுந்தேன்.


Saturday, 20 July 2019

கன்னியர் நினைவு

கன்னியர்  நினைவு இல்லையென்றால் காளைகள் உலகம் பாலைவனம்தான்

Friday, 12 July 2019

Na.mu

சோற்றுக்கு வரும் நாயிடம் யார் போய் சொல்வது வீடு மாற்றுவதை" ~ நா.முத்துக்குமார்.

கவிதை

அணு அணுவாய் சாவதென்று முடிவு செய்த பின் காதல் சரியான வழி தான்

Tuesday, 9 July 2019

புலமைப்பித்தன்

உலகமெல்லாம் உண்ணும்போது


நாமும் சாப்பிட எண்ணுவோம் ..


உலகமெல்லாம் சிரிக்கும்போது


நாமும் புன்னகை சிந்துவோம்’


சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை