Saturday, 29 August 2020

நாய்கள்

மனிதர்கள் தவிர எந்த உயிருக்கும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்ற கேள்வியே எழுவதில்லை.
ஜெயமோகன்

Friday, 28 August 2020

குழந்தைமை

குழந்தைமை என்பது ஒரு பொற்காலம். அது அப்போது பேசும் சொற்கள் நம் மொழியைச் சேர்ந்தவைதான் என்றாலும் உண்மையில் அது மனிதமொழியல்ல, தேவதைகளின் மொழி. அதனாலேயே, அந்த மொழி குழலைவிட இனியது. யாழைவிட இனியது. அது வழங்கக்கூடிய ஆனந்தத்துக்கு அளவே இல்லை. 
பாவண்ணன்

Thursday, 20 August 2020

குடை

நாம் எல்லோரும் ஞாபகம் என்ற குடையை ஏந்தியபடியே தான் எப்போதும் செல்கிறோம்.
எஸ்.ரா

Wednesday, 19 August 2020

இசை

கடவுளுக்கு அருகேயோர் இடத்தை ரசிகன் மூடிய கண்களினூடாகப் பெற்றுக் கொள்ள இயலுகிறது. இசையால் மட்டுமே ஆகிற மாயவேலை அது.

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை