Saturday, 22 June 2019

தேவதேவன் கவிதைகள்









வாழ்க்கை

”வாழ்க்கை என்பது வாரிவாரிவைத்துக்கொள்வதற்காக மட்டுமில்லை. கொஞ்சமாவது கொடுக்கவும்பழகிக்கொள்ளவேண்டும்”

Tuesday, 18 June 2019

Periyaar

பொதுவாழ்வுக்கு வந்துவிட்டால் அவமானங்களுக்கு அஞ்சாதே

Saturday, 15 June 2019

யதி

"எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது. அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும். சற்றும் எதிர்பாராதபடி ஓர் எரிமலை நம்முள் உடைந்து தீக்கங்குகளை உமிழும்போது, வானைத் துழாவும் தீ நாக்குகளை நாம் செயலற்றுப் பார்த்திருக்குபோது, அவ்வொளியில் புதிய தோற்றம் தரும் வானம், பிறகு நம் வாழ்வின் மிக இனிய நினைவுகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.”

– யதி

Sunday, 2 June 2019

தாய்மை

முலைக்காம்பை வாயில் வைத்தபடி
தூங்கிப்போகிறது சிசு
திறந்தமார்பிலேயே தூங்கிப்போகிறாள் புதுத்தாய்
இப்படியான தருணங்களில் 
துண்டுத்துணியெடுத்து தோளில் போர்த்திச் செல்கிறான் சகோதரன் 
பிள்ளையை அமத்திக் கொண்டிருக்கிறாள் என்று எல்லோரையும் வாசலோடு 
நிறுத்தி வைப்பார் அவள் தந்தை.
முந்தானை இழுத்துவிட்டு நகர்வான் தலைவன்

ஒரு குழந்தை 
வீட்டிலுள்ள எல்லா ஆண்களையும் 
தாயாக்கி விடுகிறது!

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை