முலைக்காம்பை வாயில் வைத்தபடி
தூங்கிப்போகிறது சிசு
திறந்தமார்பிலேயே தூங்கிப்போகிறாள் புதுத்தாய்
இப்படியான தருணங்களில்
துண்டுத்துணியெடுத்து தோளில் போர்த்திச் செல்கிறான் சகோதரன்
பிள்ளையை அமத்திக் கொண்டிருக்கிறாள் என்று எல்லோரையும் வாசலோடு
நிறுத்தி வைப்பார் அவள் தந்தை.
முந்தானை இழுத்துவிட்டு நகர்வான் தலைவன்
ஒரு குழந்தை
வீட்டிலுள்ள எல்லா ஆண்களையும்
தாயாக்கி விடுகிறது!
No comments:
Post a Comment