Tuesday, 28 April 2020

பொறாமை

சில விசயங்கள் எப்போதும் மகிழ்ச்சி தராது

பொறாமையும் அதில் ஒன்று !

சொந்த ஊர்

சொந்த ஊரோட அருமை

வந்த ஊருல சோறு கிடைக்காதபோது தான் தெரியும்

Monday, 27 April 2020

காலமும் துன்பமும்

காலம் கடந்த பின்னாடி துன்பங்கள் அவற்றின் கூர்மையை இழந்துவிடுகின்றன.
#அசோகமித்திரன்

அடி மற்றும் அழுகை

'அம்மாதான அடிச்சேன்'

என்பது குழந்தையின் அழுகைக்கான ஆயின்மென்ட்

இசை

‘மனித சமுதாயத்துக்குப் பொருந்திய நற்குணங்களில்லாத மனிதனுக்குத்தான் சங்கீதம் பயன்படாமல் போகும்.’’
கன்பூசியஸ்

கன்பூசியஸ்

‘‘நாம் வாயால் தெரிவிக்கும் விஷயத்தை நம் எழுத்துக்கள் பரிபூரணமாகத் தெரிவிக்காது. நாம் நினைக்கக் கூடிய விஷயங்களைப் பரிபூரணமாக நம் பேச்சிலே தெரிவித்து விட முடியாது’’.
கன்பூசியஸ்

கூழாங்கற்களின் அழகு

கூழாங்கற்கள் அளவில் சிறியதென்றாலும் தனித்துவமான அழகு கொண்டவை.
எஸ்.ரா

Friday, 24 April 2020

இலக்கியப் படைப்பாளி

வாழ்வின் உயிர்த்துடிப்பை, உற்றறிந்து அதை எழுத்தில் சிறிதும் பிசகாமல் வடிக்க எண்ணுகிறவனே படைப்பாளி. அப்படி எழுதப்படுவதே இலக்கியம். அன்பும் கனிவும் நிறைந்தவனால்மட்டுமே அந்த உயிர்த்துடிப்பை உணர முடியும். சோதனைச்சாலை முடிவுகள்
போல மற்றவர்கள் தன் அவதானிப்புகளை முன்வைக்கும்போது, படைப்பாளிமட்டுமே துடிப்பின் சாரத்தையும் உண்மையையும் நோக்கித் தன் கவனத்தைச் செலுத்துகிறான். என்னைப் பொறுத்தவரை, இவ்வகையிலான படைப்பாளியாக இயங்கவே விரும்புகிறேன். அன்புணர்ச்சியோ, கனிவுணர்ச்சியோ சிறிதும் இல்லாமல் இருக்கும்போதுதான் ஒவ்வொருவருக்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் வேகமும் பூசலும் எழுகின்றன. அந்த இடத்தில் எனக்கு ஆர்வம் இல்லை. 
பாவண்ணன்

பாவண்ணன்

வாழ்வின் உயிர்த்துடிப்பை, உற்றறிந்து அதை எழுத்தில் சிறிதும் பிசகாமல் வடிக்க எண்ணுகிறவனே படைப்பாளி. அப்படி எழுதப்படுவதே இலக்கியம். அன்பும் கனிவும் நிறைந்தவனால்மட்டுமே அந்த உயிர்த்துடிப்பை உணர முடியும்.
#பாவண்ணன்

வாழ்வு

‘வாழ்வியலில் நம் கருத்துக்குச் சிறிதும் ஒவ்வாதவர்கள் பலரை நாம் எதிர்கொள்ளக்கூடும். எளிய ஓர் உண்மையைக்கூட இந்த மண்ணில் நிலைநிறுத்த முடியவில்லையே என்கிற ஆதங்கம் எழக்கூடும். சீற்றம்கூட எழலாம். ஆனால் அது ஒருபோதும் நம்மை வெறுப்பின் எல்லைவரை அழைத்துச் செல்லக்கூடாது. மனிதர்கள்மீதுள்ள நேசம் ஒருபோதும் குறையக்கூடாது. அறியாமையால் அவர்கள் செய்யும் பிழையையும் பாவத்தையும் மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்வதற்கு மகாத்மாவாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. எளிய மனிதர்களுக்கும் அது சாத்தியம்.’ 
#பாவண்ணன் 

Tuesday, 21 April 2020

வாழ்க்கை

வாழ்க்கை என்பது கணவன்மனைவிகுடும்ப வாழ்க்கை இவற்றுக்கும் அப்பாற்பட்டு மேலானதுவிரிவானது.

பிரபஞ்சன்

உயர்ந்த நிலைக்கு வர்றதுக்கு ஒரு பெண்ணோட தூண்டுதல் நிச்சயமா வேணும்.

Sunday, 12 April 2020

வாழ்வின் தொடக்கம்

வாழ்வென்பதை எங்கிருந்தும் தொடங்கலாம்...
#பவா

Wednesday, 8 April 2020

நோய்

“அளவுக்கு அதிகமாக சிந்திப்பதும் நோய் தான்”.

தாஸ்தாவெய்ஸ்கி

Tuesday, 7 April 2020

உதவி

”ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்குத்தான் அடுத்தவரின் கஷ்டம் தெரிகிறது; உதவி என்று செய்பவர்கள் நடுத்தர வர்க்கத்தினரோ கீழ்நடுத்தர வர்க்கத்தினரோதான்; பணக்காரர்களில் மிகச் சிலர்தான் உதவி செய்கிறார்கள்” 
Here, There and Everywhere

வாசிப்பு

வாசிப்பினால் காலத்தையும் (Time) இடத்தையும் (Space) கடக்கலாம்.

Sunday, 5 April 2020

செல்வம்

உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி....

நா.மு

கருவிழி  ரெண்டும்  கருவறை  தானோ....

Friday, 3 April 2020

அன்பு

அன்பு என்பது அனைத்தையும் கடந்து பரந்து விரிந்து செல்லக்கூடிய ஆற்றல் உள்ளது.

சலனமற்ற மனம்

சலனமற்ற மனம் மிகப்பெரிய வரம்.

வாழ்வு

நாம் விழைந்ததே நமக்குக் கிடைத்திருக்கிறது என்னும் நிறைவு ஒருவருக்கு மிகமிக முக்கியம். ஆனால் எதார்த்த வாழ்வில், ஒவ்வொருவரும் தன் நிறைவைப்பற்றி நினைப்பதைவிட, அடுத்தவனுடைய நிறைவைப்பற்றிச் சிந்தித்து பொறாமையில் புழுங்குவதே வழக்கமாகிவிட்டது. அடுத்தவன் நிழல் கூட தன் நிழலைவிட நீண்டதாக இருப்பதைப் பார்த்தாலே மனம் குமுறும் மோசமான மனநிலையுடையவர்களுக்கு நடுவில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறக்கக்கூடாது.
#பாவண்ணன்

வாழ்வது

சாவதைவிட எப்படியாவது வாழ்வது நல்லதுதான்

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை