Thursday, 1 November 2018

கவிதை

கொல்லைப்புறத்து மாதுளை

எந்த நேரமும் அணில்களின் ஆரவாரம்

அம்மாவிடம் கேட்டபோது

எல்லாம் அந்த மாதுளஞ் செடிக்காக

என்றாள்

அது நமக்குத்தானே அம்மா

சின்ன மாமா நட்டதாகத்தானே சொன்னாய்

அக்கா தினமும் நீர் வார்ப்பாளே.

அம்மா சொன்னாள்

அணில்களுக்கு மாதுளை பிரியம் கண்ணே

அவை வேறு என்னதான் தின்னும்

பாவம்.

அன்று முதல் அணில்களென்றால் காதலெனக்கு

ராமகாதை படித்தபின் கூடித்தான் போச்சு

இன்றுவரை அந்தப் பவள முத்துக்களைத்

தின்று பார்த்ததில்லை நான்

இதில் எனக்கு இன்னும் பிடித்த விஷயம்

ஒரு மாலையின் உல்லாச வேளையில்

மாதுளையைப் பறித்த மூத்த அண்ணனைக்

கல்லால் அடித்ததுதான்.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை