கொல்லைப்புறத்து மாதுளை
எந்த நேரமும் அணில்களின் ஆரவாரம்
அம்மாவிடம் கேட்டபோது
எல்லாம் அந்த மாதுளஞ் செடிக்காக
என்றாள்
அது நமக்குத்தானே அம்மா
சின்ன மாமா நட்டதாகத்தானே சொன்னாய்
அக்கா தினமும் நீர் வார்ப்பாளே.
அம்மா சொன்னாள்
அணில்களுக்கு மாதுளை பிரியம் கண்ணே
அவை வேறு என்னதான் தின்னும்
பாவம்.
அன்று முதல் அணில்களென்றால் காதலெனக்கு
ராமகாதை படித்தபின் கூடித்தான் போச்சு
இன்றுவரை அந்தப் பவள முத்துக்களைத்
தின்று பார்த்ததில்லை நான்
இதில் எனக்கு இன்னும் பிடித்த விஷயம்
ஒரு மாலையின் உல்லாச வேளையில்
மாதுளையைப் பறித்த மூத்த அண்ணனைக்
கல்லால் அடித்ததுதான்.
No comments:
Post a Comment