Tuesday, 28 May 2019

பசி

திரும்பத் திரும்ப பிக்பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்றியே, நீ திருந்தவே மாட்டியா?” என்று கேட்ட நீதிபதியிடம், எத்தனை முறை பிக்பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டணைய திரும்ப திரும்ப தர்றீங்களே, சட்டத்த எப்பதான் திருத்தப்போறீங்க என்று கேட்டான் மாரியப்பன் என்ற கைதி.


பதிலேதும் சொல்ல முடியாத நீதிபதி தண்டணையை அறிவித்துவிட்டு ஜெயிலரைத் தனியே அழைத்துப் பேசினார்.


அடுத்த நாள் ஜெயிலர் பிக்பாக்கெட் அடித்த 10 பேரை ஒரு இடத்தில் தனியாக வைத்தார். அவர்களுக்குச் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.


உங்களுக்கு தினமும் இலவச சாப்பாடு கிடையாது. உழைத்து சம்பாதிக்க வேண்டும். தினமும் 200 ரூபாய் சம்பளம். இங்குள்ள கேண்டீனில் டிபன் ஐம்பது ரூபாய், மதிய உணவு 100 ரூபாய் எனச் சொல்ல, மாரியப்பன் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டான். மற்ற 9 திருடர்களையும் ஜெயிலர் தனியே அழைத்து, ஒவ்வொரு நாளும் தினம் ஒருவராக மாரியப்பன் வாங்கும் சம்பளத்தை பிக்பாக்கெட் அடிக்க வேண்டும். வெளியே தெரியக் கூடாது. தெரிந்தால் உங்கள் 9 பேருக்கும் சாப்பாடு கிடையாது என்று கூறினார்.


அதன்படியே ஒவ்வொரு நாளும் ஆளுக்கொருவராக மாரியப்பனின் பணத்தைத் திருட, கையில் காசில்லாமல் அவனும் பசியால் வாட, ஏதோ அரைக் கவளம், ஒரு வாய் என இரக்கப்பட்டுச் சிறிதளவே உணவு கொடுக்கப்பட்டது. மற்ற 9 பேருக்கும் அது வருத்தமளித்தாலும், ஒரு ஆள் பட்டினி கிடைப்பது பெரிதா? 9 பேர் பட்டினி கிடப்பது பெரிதா என்ற நோக்கத்தில் யோசித்து செய்தனர்.


ஒவ்வொரு நாளும் ஜெயிலில் இருக்கும் நாட்களில் பசியின் கொடுமை, வேதனை, வலி மட்டுமல்லாது பிக்பாக்கெட் அடிப்பதால் வரும் இழப்பினையும் கஷ்டத்தையும் மாரியப்பன் உணர்ந்தான். உடனிருக்கும் மற்ற 9 பிக்பாக்கெட் திருடர்களும் உணர்ந்தனர்.


பசியின் வேதனையும் கொடுமையும் உணர்ந்தால் மட்டுமே உணவு வீணாவதைத் தடுக்க முடியும். பட்டினியால் வாடுபவர்களை காக்க முடியும்


No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை