மனதில் சில லட்சியங்கள் பறந்துவிடும் போது அதன் நிறைவேறல் மிகச் சுலபம்.
Sunday, 29 March 2020
Saturday, 28 March 2020
வண்ணதாசன்
வாழ்வை அதன் போக்கில் மலர்ந்த நிம்மதியுடன் வாழ்கிறவர்களுக்கு, ஒரு தாமரைக்குளத்தின் பறிக்காத பூவின் அப்படியொரு அழகு வாய்த்துவிடுகிறது
Thursday, 26 March 2020
பிரபஞ்சன்
எப்போது குழந்தைகளிடம் எனக்கு வெறுப்பு வருகிறதோ, எப்போது மனிதர்களைப் பார்க்கக் கசக்கிறதோ, எப்போது காலைவேளைகள் சுவாரஸ்யம் அற்றுப் போகிறதோ, எப்போது நல்ல இசை எனக்கு எரிச்சல் தருகிறதோ, எப்போது உலகம் கெட்டு விட்டது என்று நோய்க்கூறாகச் சிந்தனை தோன்றுகிறதோ, அப்போது எனக்கு மரணம் நெருங்குகிறது என்று பொருள்
- பிரபஞ்சன்.
மு.சுயம்புலிங்கம்
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை.
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
தீட்டுக்கறை படிந்த,
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச் சந்தையில்
சகாயமாகக் கிடைக்கிறது.
இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது.
கால் நீட்டி தலை சாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது.
திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது.
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது.
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்
Sunday, 22 March 2020
Sunday, 8 March 2020
பிரபஞ்சன்
எப்போது குழந்தைகளிடம் எனக்கு வெறுப்பு வருகிறதோ, எப்போது மனிதர்களைப் பார்க்கக் கசக்கிறதோ, எப்போது காலைவேளைகள் சுவாரஸ்யம் அற்றுப் போகிறதோ, எப்போது நல்ல இசை எனக்கு எரிச்சல் தருகிறதோ, எப்போது உலகம் கெட்டு விட்டது என்று நோய்க்கூறாகச் சிந்தனை தோன்றுகிறதோ, அப்போது எனக்கு மரணம் நெருங்குகிறது என்று பொருள்
- பிரபஞ்சன்.
Subscribe to:
Posts (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...