Thursday, 26 March 2020

மு.சுயம்புலிங்கம்

நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்

எங்களுக்கு ஒரு குறையும் இல்லை.

டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்

ஒரு அடி கொடுப்போம்

வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

தீட்டுக்கறை படிந்த,

பூ அழிந்த சேலைகள்

பழைய துணிச் சந்தையில்

சகாயமாகக் கிடைக்கிறது.

இச்சையைத் தணிக்க

இரவில் எப்படியும் இருட்டு வருகிறது.

கால் நீட்டி தலை சாய்க்க

தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது.

திறந்தவெளிக் காற்று

யாருக்குக் கிடைக்கும்

எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது.

எதுவும் கிடைக்காதபோது

களிமண் உருண்டையை வாயில் போட்டு

தண்ணீர் குடிக்கிறோம்

ஜீரணமாகிவிடுகிறது.

எங்களுக்கு ஒரு குறையும் இல்லை

நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை