Monday, 29 June 2020

வண்ணதாசன்

தனியாக சீட்டு விளையாடுபவர்களை
தனியாக சமைத்துச் தனியாக சாப்பிடுகிறவர்களை
தனியாக பழைய பாடல்கள் கேட்பவரை
தனியாக மது அருந்துகிறவர்களை
தனியாக அமர்ந்து நூலகங்களில் வாசிப்பவர்களை
தனியாக உலர்சலவையகங்களுக்கு வருபவர்களை
தனியாக நகராட்சிப் பூங்காவில் அமர்ந்திருப்பவர்களை
தனியாக தேவாலயங்களில் பிரார்த்திப்பவரை
தனியாக கிளிஜோஸ்யம் பார்ப்பவரை
தனியாக அரசமர இலையை அவதானிக்கிறவரை
தனியாக நின்று காக்கை கொத்தி இழுக்கும்
பெருச்சாளியின் திறந்த வயிற்றைக் காண்கிறவரை
தனியாக இருக்கும் அவர் பக்கம் உருண்டுவரும்
விளையாட்டுப் பந்தை எடுத்து வீசாதவர்களை
தன்னுடைய கால்பக்கம் நிழற்குடையில் ஒதுங்கும்
நாய்க்குட்டியைக் குனிந்து பார்க்காதவர்களை
ஒன்றும் செய்ய முடியாததற்கு வருத்தப்படாதீர்கள்.
அவர்கள் தேர்ந்தெடுத்த தனிமையில்
அப்படியே பத்திரமாக இருக்கட்டும்.
அவர்களின் தீவைச் சுற்றியே இருக்கிறது
அத்தனை திசைகளிலும்
நம் கடல்.

Saturday, 27 June 2020

ஆசிரியர்

அன்பை சம்பாதிக்க ஆசைப்பட்டவர் ஆசிரியர் ஆனார்.

Friday, 26 June 2020

இலக்கியம்

இலக்கியம் என்பது ஒரு கண்டடைதல் செயல்பாடு #ஜெயமோகன்

Sunday, 21 June 2020

பாஷைகள்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை# நா.முத்துக்குமார்

Monday, 8 June 2020

தீராத புத்தகம்

தீராத
வாசிப்புக்குறிய ஒரு புத்தகம் உண்டென்றால் அது மனிதர்களாகத் தான்
இருக்கமுடியும் அல்லது இந்த வாழ்க்கையாகத்தான் இருக்கும் என்று
நம்புகிறேன்
கல்யாணி.சி

சிரிப்பு

தொட்டில் குழந்தையின் முகத்தில் வரும் நரிவிரட்டும் அற்புதச்  சிரிப்பு,ஒரு எழுபது வயது மனுஷியின் முகத்தில் வரும் எனில் அது எவ்வளவு கனிவாக இருக்கும்.!
*வண்ணதாசனின் சமவெளி

Sunday, 7 June 2020

Google

கூகுள் இல்லாமல் போயிருந்தால்..

புத்தகங்களையும், பெரியவர்களையும் தேடி போயிருப்போம்..!!

Wednesday, 3 June 2020

இளையராஜா

மனசொன்னுதான் மனுஷனுக்கு
துணை இருக்கும்

கவிஞர் வாலி

தினமும் ஓர் கோலம்..
இளமை திருவிழா காலம்...

Tuesday, 2 June 2020

வாழ்வும் சிக்கல்களும்

'இந்த வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது. ஆனால் சிக்கல்கள் மட்டுமே அல்ல.. முற்றிலும் வெறுப்புக்குரிய கோளமாக என்றாவது இந்தப் பூமி பெயர் கொள்ளும் எனில், அது துக்கத்துக்குரியதே. அது ஒருபோதும் அப்படி ஆகாத அளவுக்கு அடையாளம் காட்டத் தெரியாத ஒரு சமன்பாடு நம் மத்தியில் எப்போதும் இருக்கும் என்று நம்பத் தோன்றுகிறது'

- வண்ணதாசன்

Monday, 1 June 2020

மதிப்பீடு

நான் ரொம்ப அறிவாளி என்பதை விட பிறரை முட்டாள் என மதிப்பிடுவது பெரும் ஆபத்து !!

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை