இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை யுடைத்து
காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறும் நன்று; திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது. மலை இனிது. காடு நன்று.
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,
மலரும், காயும், கனியும் இனியன.
பறவைகள் இனிய.
ஊர்வனவும் நல்லன.
விலங்குகளெல்லாம் இனியவை.
நீர் வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம்.
இளமை இனிது. முதுமை நன்று.
உயிர் நன்று. சாதல் இனிது.
– மகாகவி பாரதியார்
No comments:
Post a Comment