ஒரு மேஜை. அதன் மேல் உணவுப்பொருட்கள் இருக்கின்றன. ஆடைகள் இருக்கின்றன. வண்ணப்பாத்திரங்களும் மின்னணுச்சாதனங்களும் இருக்கின்றன. இன்னும் நாம் அன்றாட வாழ்க்கையில் புழங்கும் ஏதேதோ பொருட்கள் இருக்கின்றன. அந்த மேஜையில் ஒரு வைரம் கொண்டு வந்து வைக்கப்பட்டால் என்ன நிகழும்? அந்த அத்தனை பொருட்களும் வைரத்தாலேயே மதிப்பிடப்படும். ஒரு வைரத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் அந்தப்பொருட்கள் பெறும் என்பதே நம் எண்ணமாக இருக்கும்.
வைரம் எந்தப் பயன்மதிப்பும் அற்றது. வெறும் ஒரு கல். ஆனால் அத்தனை பயன்பொருட்களையும் மதிப்பிடும் ஒன்றாக அது தன் அழகால் தன்னை ஆக்கிக்கொண்டிருக்கிறது. அதுவே கவிதை. உலகியலுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட அழகு அது. நம் உலகியலின் மதிப்பு என்ன என்று நமக்குக் காட்டித்தருவது என்பதே அதன் ஒரே உலகியல் மதிப்பு.
No comments:
Post a Comment