ஏன்யா, பாண்டிச்சேரி போறேன்னு சொல்லிட்டு எந்த பஸ்லயும் ஏற மாட்டேங்கறே...?
எல்லா பஸ் கண்டக்டரும் 'பாண்டி' மட்டும் ஏறுங்கன்னு தானே சொல்றாங்க, என் பேரு கிஷோருங்க...!
ஏன்யா, பாண்டிச்சேரி போறேன்னு சொல்லிட்டு எந்த பஸ்லயும் ஏற மாட்டேங்கறே...?
எல்லா பஸ் கண்டக்டரும் 'பாண்டி' மட்டும் ஏறுங்கன்னு தானே சொல்றாங்க, என் பேரு கிஷோருங்க...!
பல்லவி :
நான் என்பது யாரோ
பெருந்திரளினிலே
நான் என்பதை வீசி
எழுந்தேனே மனமே
தான் என்பது போகும்
பெருங்கணத்தினில
வாவென்றொரு வாழ்க்கை
சிறுகுரலாய் அருளாய்ப் பேச
போகாதொரு ஆழம்தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
ஆழ் என்றது மெய்ஞான போதம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
போல் என்பது பகட்டு வாதமே
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
நாள் என்பதும் பொய்யான காலம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
கேள் என்குதே தெளிந்த ஞானமே
கேட்க கேட்க ஓசை மீறிக்
கேட்கிறதே....
சரணம் 1:
ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்
யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே
புவிமேலே
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே
நிறுத்தாமல்
பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
இப்போது இப்போது இப்போது
கண்ணாக
பேருண்மையில் கலந்துபோகிறேன்
இப்போது இப்போது இப்போது
ஒன்றாக
பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
இப்போது இப்போது இப்போது
நன்றாக
பேராற்றலில் கரைந்துபோகிறேன்
பூத பேத வாத மோகம்
மறைகிறதே...
சரணம் 2 :
நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ
சலிக்காமல்
பேரலைமேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
பூவீழும் குளத்தின்மேலே
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்
வாகாய் வாகாய்
வாழ்கிறேன்
பாகாய்ப் பாகாய்
ஆகிறேன்
தோதாய்த் தோதாய்ப்
போகிறேன்
தூதாய்த் தூதாய்
ஆகிறேன்
போதாய்ப் போதாய்ப்
பூக்கிறேன்
காதாய்க் காதாய்க்
கேட்கிறேன்
ஆரோ ஆராரிரிரோ
தாலாட்டும் காலம்
தலையாட்டும் ஞானம்
ஆரோ ஆராரிரிரோ
தாய்ப்போல் பாடுதே
ஆரோ......
சிறகு இருக்கு, வானம் இருக்கு என்பதற்காகலாம் பறவை பறந்துவிடாது...
அதற்கு விருப்பம் இருக்க வேண்டும்,
தேவை இருக்க வேண்டும்!
"உன்னைக் காணும் கடைசி முறை இது தான் என்று எனக்கு தெரிந்தால், உன்னை இறுக்கி அணைத்துக்கொள்வே
நீ கதவைக் கடந்து போகும் கடைசி கணம் இது தான் என்று தெரிந்தால் உன்னை தழுவிக்கொண்டு, முத்தமிடுவேன். உன்னை இன்னுமொரு முறை பெயரிட்டு அழைப்பேன்.
இது தான் உன்னுடைய குரலை கேட்கும் இறுதிப் பொழுது என்று அறிந்தால், நீ உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையையும் சேகரித்து மீண்டும், மீண்டும் கேட்க பத்திரப்படுத்தி
உன்னைக் காணும் இறுதித்தருணம் இது தான் என்று உணர்ந்தால் நான் உன் மீது கொண்டிருக்கும் பிரியம் உனக்கு ஏற்கனவே தெரியும் என மூடனைப் போல கருதாமல் 'உன்னை நான் காதலிக்கிறேன்' என்று சொல்லியிருப்பேன். "
கேப்ரியேல் கார்ஸியா
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை