Wednesday, 19 February 2020

Pondy

ஏன்யா, பாண்டிச்சேரி போறேன்னு சொல்லிட்டு எந்த பஸ்லயும் ஏற மாட்டேங்கறே...?

எல்லா பஸ் கண்டக்டரும் 'பாண்டி' மட்டும் ஏறுங்கன்னு தானே சொல்றாங்க, என் பேரு கிஷோருங்க...!

Tuesday, 18 February 2020

பொம்மைகள்

பொம்மைகள் எல்லோரையும்
குழந்தைகளாக்கி விடுகிறது

Karthik netha

JOURNEY SONG :

பல்லவி :

நான் என்பது யாரோ 
பெருந்திரளினிலே - ஏடே
நான் என்பதை வீசி 
எழுந்தேனே மனமே

தான் என்பது போகும் 
பெருங்கணத்தினிலே - கூவி
வாவென்றொரு வாழ்க்கை 
சிறுகுரலாய் அருளாய்ப் பேச

போகாதொரு ஆழம்தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்

காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்

ஆழ் என்றது மெய்ஞான போதம் 
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்

போல் என்பது பகட்டு வாதமே
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்

நாள் என்பதும் பொய்யான காலம் 
இப்போதில் இப்போதில் இப்போதில் 
எல்லாமும்

கேள் என்குதே தெளிந்த ஞானமே
கேட்க கேட்க ஓசை மீறிக்
கேட்கிறதே....

சரணம் 1:

ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்

யார் உடைத்தாலும் 
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்

ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே 
புவிமேலே

தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே 
நிறுத்தாமல்

பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன் 
இப்போது இப்போது இப்போது
கண்ணாக

பேருண்மையில் கலந்துபோகிறேன் 
இப்போது இப்போது இப்போது 
ஒன்றாக

பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன் 
இப்போது இப்போது இப்போது
நன்றாக

பேராற்றலில் கரைந்துபோகிறேன்
பூத பேத வாத மோகம்
மறைகிறதே...

சரணம் 2 :

நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ 
சலிக்காமல்

பேரலைமேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்

சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்

பூவீழும் குளத்தின்மேலே 
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்

வாகாய் வாகாய்
வாழ்கிறேன்
பாகாய்ப் பாகாய் 
ஆகிறேன்

தோதாய்த் தோதாய்ப்
போகிறேன்
தூதாய்த் தூதாய்
ஆகிறேன்

போதாய்ப் போதாய்ப்
பூக்கிறேன்
காதாய்க் காதாய்க்
கேட்கிறேன்

ஆரோ ஆராரிரிரோ
தாலாட்டும் காலம்
தலையாட்டும் ஞானம்
ஆரோ ஆராரிரிரோ
தாய்ப்போல் பாடுதே

ஆரோ......

Monday, 17 February 2020

பறத்தல்

சிறகு இருக்கு, வானம் இருக்கு என்பதற்காகலாம் பறவை பறந்துவிடாது...

அதற்கு விருப்பம் இருக்க வேண்டும்,

தேவை இருக்க வேண்டும்!

Saturday, 15 February 2020

குழந்தைகளின் முகம்

சற்றுமுன் விரிந்த மொட்டுக்களை போல எப்பொழுதும் புத்துணர்வுடன் காட்சியளிப்பது குழந்தைகளின் புன்னகை சிந்தும் முகம் தான்...

கடைசி முறை

"உன்னைக் காணும் கடைசி முறை இது தான் என்று எனக்கு தெரிந்தால், உன்னை இறுக்கி அணைத்துக்கொள்வேன். இறைவனிடம் உன்னுடைய ஆன்மாவைக் காக்கும்படி இறைஞ்சுவேன்.

நீ கதவைக் கடந்து போகும் கடைசி கணம் இது தான் என்று தெரிந்தால் உன்னை தழுவிக்கொண்டு, முத்தமிடுவேன். உன்னை இன்னுமொரு முறை பெயரிட்டு அழைப்பேன்.

இது தான் உன்னுடைய குரலை கேட்கும் இறுதிப் பொழுது என்று அறிந்தால், நீ உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையையும் சேகரித்து மீண்டும், மீண்டும் கேட்க பத்திரப்படுத்திக்கொள்வேன்.

உன்னைக் காணும் இறுதித்தருணம் இது தான் என்று உணர்ந்தால் நான் உன் மீது கொண்டிருக்கும் பிரியம் உனக்கு ஏற்கனவே தெரியும் என மூடனைப் போல கருதாமல் 'உன்னை நான் காதலிக்கிறேன்' என்று சொல்லியிருப்பேன். "

கேப்ரியேல் கார்ஸியா

Friday, 14 February 2020

கதை

'இளம் வெயிலும் மிதமான காற்றும் இசைவான கடலலையும் எல்லோருக்கும் வாய்க்க நாம் கதை எழுதுவதுதான் ஒரே வழி’ ச.தமிழ்ச்செல்வன்

Wednesday, 12 February 2020

அன்பின் கொடி

அன்பின் கொடிகள் திசைகள் தீர்மானித்து படர்வதே இல்லை..

Monday, 10 February 2020

விருட்சம்

தானா விழுந்த வெத தன்னால மரமாச்சு...

செல்பி

"செல்பி" என்ற ஒன்று இல்லையெனில் செல்போன் நம்மை தலை நிமிரவே விடாது...!!!

Saturday, 8 February 2020

பாடல்

என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு letter
Still i remember my first letter
பிரபா
நீ என்னை தேடியிருப்பேன்னு எனக்கு தெரியும்
நானும் அம்மாவும் இங்க maharashtra'ல தூரத்து மாமா வீட்டுல இருக்கறோம்
நீ வர்றதுக்கோ letter எழுதறதுக்கோ ஏத்த சமயம் வர்றப்ப நான் சொல்றேன்
நேரத்துக்கு சாப்பிடு
வாரத்துக்கு மூணு நாளாவது குளி
அந்த socks'a துவைச்சு போடு
நகம் கடிக்காத
கடவுள வேண்டிக்கோ-ஆனந்தி(ஆனந்தி)
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே
அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீதானே
பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ
நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே

காதல்

காதலே வாழ்வின் நீளம்

நா.மு

இந்த புல் பூண்டும் பறவை யாவும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?

Thursday, 6 February 2020

வாழ்வு

எளிமையான விடயங்களில் உள்ள அழகைக் கண்டடையும் சக்தி நம்மை மகிழ்ச்சியாக்கும்,
வாழ்வை அன்புமயமாக்கும்.

Wednesday, 5 February 2020

வாசிப்பு

யாரோ ஒருவரின் நகலாக முற்படாமல் நம்மை நாமாக, நமது வாழ்க்கையை வாழ வாசிப்பு வகைசெய்கிறது #க.மோகனரங்கன்

தேவதேவன்

ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்
இன்னொரு காலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளாய்க் காய்த்து
இருட்டில் செய்வதறியாது
கத்திக் கொண்டிருந்தது

ஒரு நண்பனைப்போல்
சூர்யன் என்னைத் தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய்ப் பரவ
மெய் சிலிர்த்து நின்றது அந்த மரம்
#தேவதேவன்

Tuesday, 4 February 2020

வாசிப்பு

வாசிப்பு 😍🥰

படைப்பு

எவ்வளவுக்கு ஒரு படைப்பு வாசகனுடைய பங்கீட்டைக் கேட்கிறதோ அவ்வளவுக்கு அந்தப் படைப்பு உயர்ந்து நிற்கிறது..
ஓர் உன்னதமான இலக்கியம் உண்மையில் வாசகனாலேயே பூர்த்தி செய்யப் படுகிறது..#அ.முத்துலிங்கம்

Monday, 3 February 2020

பிரமிள்

முடிவில்

ஒரு பழைய துருப்பிடித்த
இரும்புப் பெட்டிக்குள்
என்னை
இருத்தி
ஒரு உறுதியான பூட்டால் பூட்டி
மூன்று நாட்கள்
மூன்று மணிகள்
மூன்று நிமிடங்கள்
மூன்று கணங்கள்
முடிவில் அழைத்தாலும்
நான்
இருந்தபடியே
துருப்பிடிக்காத இரும்புச்சத்தோடு
வெளி வருவேன்
மேலும் (?)
அமைதியோடு

வாழ்க்கை

வாழ்க்கை என்பது மாபெரும் வரம் என்று அப்போது என் அகம் அறிந்தது. இந்த உலகின் ஒவ்வொரு துளியும் பேரழகு கொண்டது, மகத்தானது. இதன் ஒவ்வொரு கணமும் அமுதம்.

காலத்தின் கேள்வி

காலம் அதன் பாதையில் வாழ்வின் அர்த்தம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது

ஒளி

 உனக்கு ஒளி தருவது எதுவோ அதுவே உனக்குச் சூரியன்..

Sunday, 2 February 2020

நா.மு

தட்டான் பூச்சி போல வண்ணம் அள்ளி தாரே
கண்ணில் இன்னும் வேற ஏதோ சொல்லி தாரே #நா.மு

இறைஞ்சல்

"இறைஞ்சிப் பெறும் எதுவொன்றுமே
உயர்ந்த பொருளின் ஒப்பற்ற வடிவம்"

பாடல்

இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை