"உன்னைக் காணும் கடைசி முறை இது தான் என்று எனக்கு தெரிந்தால், உன்னை இறுக்கி அணைத்துக்கொள்வே
நீ கதவைக் கடந்து போகும் கடைசி கணம் இது தான் என்று தெரிந்தால் உன்னை தழுவிக்கொண்டு, முத்தமிடுவேன். உன்னை இன்னுமொரு முறை பெயரிட்டு அழைப்பேன்.
இது தான் உன்னுடைய குரலை கேட்கும் இறுதிப் பொழுது என்று அறிந்தால், நீ உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையையும் சேகரித்து மீண்டும், மீண்டும் கேட்க பத்திரப்படுத்தி
உன்னைக் காணும் இறுதித்தருணம் இது தான் என்று உணர்ந்தால் நான் உன் மீது கொண்டிருக்கும் பிரியம் உனக்கு ஏற்கனவே தெரியும் என மூடனைப் போல கருதாமல் 'உன்னை நான் காதலிக்கிறேன்' என்று சொல்லியிருப்பேன். "
கேப்ரியேல் கார்ஸியா
No comments:
Post a Comment