Monday, 8 January 2018

புடிச்ச பாட்டு

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் 
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென 
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் 
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் 

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் 
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென 
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் 
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் 

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் 
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் 
நகர்வேன் ஏமாற்றி 

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் 
ஒரு வண்ண கவிதை காதல் தானா 
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே 
இதை இருளிலும் படித்திட முடிகிறதே 

இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா 
தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குரையுமா 
மடியினில் சாய்ந்திட துடிக்குதே 
மறுபுறம் நாணமும் தடுக்குதே 
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை 

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் 
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென 
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் 
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் 

ஒஹ்... 

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய் 
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை போல் வந்து கலந்திட்டாய் 
உனை அன்றி வேர் ஒரு நினைவில்லை 
இனி இந்த ஊனுயிர் எனதில்லை 
தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர 

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் 
ஒரு வண்ண கவிதை காதல் தானா 
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே 
இதை இருளிலும் படித்திட முடிகிறதே 

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் 
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் 
நகர்வேன் ஏமாற்றி 

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் 
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென 
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் 
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் 

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை