உயர்வான கலையம்சம் ஒன்றை ஒரு மனிதன் தரிசனம் செய்துவிட்டால் அதன் பிறகு அவன் தன்னை ஒரு போதும் தனிமனிதனாக நினைக்கவே முடியாது. காரணம் அவன் உள்ளவரை அவன் நினைவில் அந்த கலையம்சம் நிரம்பிய பொருள் அப்படியே இருக்கும். உலகின் ஒப்பில்லாத கலைப்பொருளை மனது கொண்டிருக்கும் போது நாம் எப்படி தனியான மனிதனாக உணர முடியும்.
அன்றாடம் சாப்பிட்டு உறங்கி எழுந்து வாழும் வாழ்க்கையை விட சில மேலான விசயங்கள் உலகில் இருக்கின்றன. அதை நோக்கி நகர்வதே கலைஞனின் வேலை. கலை மனதை ஆறுதல்படுத்தவும் சந்தோஷம் தரவும் கூடியது.
No comments:
Post a Comment