Saturday, 15 December 2018

Sujatha selvaraj

அன்பின் தீக்கொடி

மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்

விம்மி வலித்துக் கசிகிறது எனதன்பு – நீயோ

அதனைக் கழிவறையில் பீய்ச்சியடிக்கப் பணிக்கிறாய்

வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி

ஓயாமல் அலைகின்றேன் – நீயோ

மனப்பிறழ்வுக்கான மருந்தொன்றைச் சிபாரிசு செய்கிறாய்

இயந்திரத்திற்குச் சிக்கிய செங்கரும்பாய்

வெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு

புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென

உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை