படம் : தெய்வ வாக்கு
பாடல் : வள்ளி வள்ளி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : இளையராஜா, S.ஜானகி
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்
சொல்லிதர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்
—
சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்டானது கைகள் தொட இன்னாள் ஒன்றானது
வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
அன்புதேன் இன்பதேன் கொட்டுமா
இந்த பூ சின்ன பூ கன்னிப்போகும் கன்னிப்பூ
வண்டுதான் வந்துதான் தட்டுமா
என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னமா
—
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்
சொல்லிதர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்
—
செந்தாழ் புல்லாங்குழல் வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல்
மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும்
மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் தங்கை நீ
உன்னைதான் எண்ணங்கள் சந்திக்கும்
எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேற இங்கு யாரும் இல்லையே
—
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்
சொல்லிதர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்
சொல்லிதர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்
=====
No comments:
Post a Comment