Monday, 9 April 2018

கவிதை

அன்பின் விலைகள்

“எதற்காகவோ கண் கலங்கியபடி

ஆட்டோவில் ஏறினேன்.

சத்தமின்றி விம்மத் துவங்கி

பின் உடைந்து பெரிதாய் அழவும்

ஆட்டோக்காரன்

திரும்பிப் பார்த்துத் தயங்கி

அழாதிங்க என்றான்.

என் இடம் வந்ததும்

கொடுத்த இருபது ரூபாய்க்கு

எட்டு ரூபாய் சில்லறை

எண்ணிக் கொடுத்துவிட்டுச்

சென்று விட்டான்.

அந்த மீதி சில்லறையாவது

வாங்காமல் விட்டிருக்கலாம்..!”

                             -  அனிதா ஜெயக்குமார்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை