Friday, 15 December 2017

அன்புள்ள சந்தியா

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்

எந்தப்பக்கம் நீ செல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே

தூரல் வந்தால் கோலங்கள் அழியும்
காலம் வந்தால் கல்வெட்டும் அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே

அடி கோயில் மூடினால் கூட
கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை

உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்

தாயை கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளை போலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அரியாதா…

என்றோ யாரோ உன் கையை தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவாய்
அன்பே அது நானாகக்கூடாதா

உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை
உயிரோடு எரிக்குதே என்னை

உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
ஓ…

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
ஓ….

Lyrics: Na. Mu
Music : YSR

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை