Tuesday, 20 February 2018

அம்மா

அம்மாவின் பொய்கள்

“பெண்ணுடன்

சினேகம் கொண்டால்

காதறுந்து போகும் என்றாய்.

தவறுகள் செய்தால் சாமி

கண்களைக் குத்தும் என்றாய்.

தின்பதற் கேதும் கேட்டால்

வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்.

ஒருமுறை தவிட்டுக்காக

வாங்கினேன் உன்னை என்றாய்.

எத்தனைப் பொய்கள் முன்பு

என்னிடம் சொன்னாய் அம்மா.

அத்தனைப் பொய்கள் முன்பு

சொன்ன நீ எதனாலின்று

பொய்களை நிறுத்திக் கொண்டாய்.

தவறு மேல் தவறு செய்யும்

ஆற்றல் போய் விட்டதென்றா..?

எனக்கினி பொய்கள் தேவை

இல்லையென் றெண்ணினாயா..?

அல்லது வயதானோர்க்குத்

தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்

பொறுப்பினி அரசாங்கத்தைச்

சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்

தாய்ப் பொய்யை நிறுத்தலாமா...

உன்பிள்ளை உன்னை விட்டால்

வேறெங்கு பெறுவான் பொய்கள்..?”

- ஞானக்கூத்தன்.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை