Thursday, 8 February 2018

கண்ணதாசன்

ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் தேவன் காவியம்

நீங்களோ நாங்களோ 

நெருங்கி வந்து சொல்லுங்கள்

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்

மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ

ராகங்கள் நூறு பாவங்கள் நூறு

என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ

கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்

எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ

காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்

நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே

மலையின் மீது ரதி உலாவும் நேரமே

சாயாத குன்றும் காணாத நெஞ்சும்

தாலாட்டு பாடாமல் தாயாகுமோ


படம்: நிறம் மாறாத பூக்கள்

இசை: இளையராஜா

பாடல்: கண்ணதாசன்

பாடியவர்கள்; ஜென்சி, SP.ஷைலஜா, மலேசியா வாசுதேவன்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை