Wednesday, 21 February 2018

Vadivelu

விசித்திர உலகில் எதிர்பார்க்காத அனைத்தும் நடந்தும், சகித்து வாழ பழகி கொண்டுள்ளோம்.

‘என்னைத் தவிர யாரைக் கட்டியிருந்தாலும் உன்கூட குடும்பம் நடத்தியிருக்க முடியாது’ – பல கணவன் மனைவிக்கு இருக்கும் ஒன்றுபட்ட எண்ணம் இதுவே.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரும் ஹெல்மெட் அணிவது போலீஸுக்குப் பயந்து தானே தவிர, உயிருக்குப் பயந்தல்ல.

ஆஸ்பத்திரியில் நலம் விசாரிப்பதற்கு நாலு நல்ல வார்த்தைகளை விட, நாலு நல்ல ஆப்பிள்களே போதுமானதாக இருக்கிறது.

ஒரு வருடத்துக்கு முன்பு, மணக்கோலத்தில் நண்பனை சிரிப்போடும் அவன் மனைவியை கண்ணீரோடும் கண்டேன். ஓராண்டுக்குப்பின் பார்த்தபோது கண்ணீர் இடம்மாறியிருந்தது..

பெண்களை விட ஆண்களுக்கு நன்றாகச் சமைக்க தெரியும். ஆனால், ஆண்கள் ஒரு நாள் சமைக்கிற பொருளை வைத்து பெண்கள் ஒரு வாரத்துக்குச் சமைச்சுடுவாங்க .

காலையில எழுந்ததும் Whatsapp ஓப்பன் பண்ற மாதிரி சின்னபுள்ளையில பாட புத்தகத்தை ஓப்பன் பண்ணியிருந்தா பலர் உருப்பட்டிருப்பாங்க.

ஓட்டலில் சர்வர் என்ன சாப்பிடுறீங்கன்னு கேட்டாலே ஒழுங்கா பதில் சொல்லத் தெரியல, இதுல கடவுள் வந்து என்ன வரம் வேணும்னு கேட்டா... எப்படி சொல்லுவது?

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெற்றோர் நம்மை அடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். பின்னர், அவங்க கை வலிக்குதுனு நமக்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்

இரவு கணவனை சாப்பிட வாங்கன்னு மனைவி அழைத்தால், சீரியல் முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்

பந்தி பரிமாறுபவர் நமக்கு நன்கு தெரிந்தவராயின் மனதுக்குள் வரும் சந்தோஷம் சுகமானது.

பொண்டாட்டியைச் சமாதானப்படுத்த வீட்ல பீரோவில் கிடக்கும் சேலையையே பேக் பண்ணி கிப்டா கொடுத்துடணும். கண்டிப்பா தெரியாது, பீரோ முழுக்க அவ்ளோ சேலை.

பேருந்தில் ஏறி அமர்ந்தவுடனே தூங்கிவிடுவது வரம். அவ்வரம் பெற்றவர் நம் அருகில் அமர்ந்திருப்பது சாபம்.

ஒரு பெண் ஒரு நிமிடத்தில் சேலையை செலக்ட் செய்கிறாள் என்றால், அந்த சேலை வேறு யாருக்கோ என்று அர்த்தம்.

நல்லா போய்க்கிட்டிருந்த பஸ் திடீர்னு குலுங்கி குலுங்கி போக ஆரம்பிச்சா... நாம பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளே வந்துட்டோம்னு அர்த்தம்.

அம்மா இலவசமா கொடுத்த ஆடு மாடு மட்டும்தான் இன்னும் அம்மானு கத்திக்கிட்டு இருக்கு. மீதி இருக்கும் எல்லாரும் அவங்க இஷ்டத்துக்கு கத்துறாங்க.

முன்பு ஆண்களுக்குக் குட்டிச்சுவர், டீக்கடை பெஞ்ச்... பெண்களுக்கு வீட்டுத் திண்ணை, குழாயடி. ஆனால், எல்லோருக்குமா இப்போ வாட்ஸ்அப் ஆயிடுச்சு

பெண்கள் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஒருவர் சொல்வதைக் கேட்டு அமைதியாக நிற்கிறார்கள் என்றால் அவர் போட்டோகிராபராகத்தான் இருக்க வேண்டும்.

பேசாமல் இருந்தால், ‘ஏன் பேச மாட்டேன்ங்கிறீங்க?’ என்று நச்சரிப்பதும், பேசினால் சண்டைக்கு இழுப்பதும் மனைவியின் இயல்பு.

புரிந்து நடந்துகொண்டால் வாழ்க்கை வசப்படும். ஆனால், கனடா நாட்டு பிரதமரை நம் நாட்டு பிரதமர் வரவேற்காதது ஏன் எனச் சர்ச்சையை கிளப்பியிருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை