Friday, 9 February 2018

தாமரை

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உனை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டிப் பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்பமாட்டேன் நானும்

பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு கோலம் போடும்

வாழ்வின் எல்லை தேடும் தேடும்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உனை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

ஒரு வீட்டில் நாம் இருந்து, ஓர் இலையில் நம் விருந்து

இரு தூக்கம் ஒரு கனவில், மூழ்கி வாழ்க்கை தொடங்கும்

நான் சமையல்  செய்திடுவேன், நீ வந்து அனைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும், சேர்ந்து ஒன்றாய் அடங்கும்
நான் கேடு ஆசை பட்ட பாடல் நூறு

நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்

தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீதான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்

மாலை மங்கும்...

பால் சிந்தும் பௌர்ணமியில்  நாம் நனைவோம் பணி இரவில்,
நாம் மூச்சின் காய்ச்சலில், மீண்டு பணியும் நடுங்கும்

வீடெங்கும் உன் பொருட்கள், அசைந்தாடும் உன் உடைகள்,
தனியாக நானில்லை என்றே சொல்லி சிணுங்கும்

தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம்  தீர்ந்து நாட்கள் ஆச்சே

உன் வாசம் என்னில் பட்டும் ஆடிப் போனேன்

வாசல் தூண்தான்  நானும் ஆனேன்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை