Wednesday, 6 June 2018

பாடல்

படம்: சொல்ல மறந்த கதை
பாடல்: அம்மா சொன்ன ஆரிரரோ
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

சின்ன உயிரின் உடல் வளர மடி தந்து,
கண்ணின் மணிபோல் காக்க தனை தந்து,
அன்பின் உருவாய் மண்ணில் இருப்பது யார்?
அம்மா!…..அம்மா!…

அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்கு தூளி கட்டி
பூங்கொடி!
ஒரு பிஞ்சு பிஞ்சு கிளி வளர்க்கும்
மாஞ்செடி!…..பூந்தேனடி!
வீணையென்ன? குழலும் என்ன?
கொஞ்சும் பிள்ளை முன்னே!
தேனும் என்ன? பாகும் என்ன?
அன்னை அன்பின் முன்னே! ஹோய்!

காதல்சுமை, கணவன்சுமை, குடும்பச்சுமை தாங்குவாள்!
காலமெல்லாம் கன்னியர்க்கு ஓய்வு உண்டோ?
சுமைகளெல்லாம் சுமப்பதிலே, சுகமிருக்கும் பெண்ணுக்கு,
சுகம் கொடுக்கும் பிள்ளைச்சுமை சொல்லிடவோ?

கைப்பிடித்த கணவன் கால்கள் பிடிப்பாள்!
கண்மணிக்கு இமைபோல் காவல் இருப்பாள்!
அன்னையென ஆனால் தன் பிள்ளைக்கென குழைவாள்!
மண்ணில் உண்மையிலே உயர்ந்த ஜென்மம் பெண் ஜென்மமே!

காற்றினிலே கலந்துவரும் கார்குயிலின் கானம் போல்,
காதினிலே கேட்கும் பிள்ளை கனிமொழி!
தூண்டிலிட்டு இழுக்கும் அந்த தூயநிலா ஒளியைப்போல்,
பேச்சு இன்றி பிடித்திழுக்கும் வண்ணவிழி!

சிதறிவரும் சிரிப்பில் முத்து தெறிக்கும்!
சிரிக்கும் அந்த வெள்ளிமீன் உள்ளம் பறிக்கும்!
ஏங்குதம்மா நெஞ்சம், ஏந்திக் கொண்டு பாட!
கையில் என்று வரும் பிள்ளைநிலா நீ கூறடி!

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை