Friday, 25 January 2019

வாசிப்பு

வாசிப்பு என்பது மகத்தானஅனுபவம். எதார்த்த வாழ்வில் நாம்காணமுடியாத பல காட்சிகளை அவைநமக்கு அடுக்கிக் காட்டுகின்றன. பலமனிதர்களைச் சந்திக்கவைக்கின்றன.பலவிதமான நிலங்கள்,  காடுகள், ஆறுகள்,மலைகள், மரங்கள், பூக்கள் என ஏராளமான புதுமைகளை நம் முன்காட்சிகளாக நிறுத்துகின்றன. மனஉணர்வுகளுக்கு இயைந்தவிதத்தில்அவை ஒவ்வொன்றும் உருக்கொண்டு, நம்புரிதலையும் மனத்தையும்விரிவாக்குகின்றன. நம்மையறியாமல்நமக்குள் இருந்த இருள் விலகிச்செல்வதையும் மேகங்களைப்புரட்டிக்கொண்டு மெல்ல எழும்சூரியக்கதிரென நம் நெஞ்சில் உதித்துச்சுடர்விடும் எண்ணங்களால்பெரும்பரவசமொன்று வந்து படிவதையும்உணரவைக்கின்றன.  ஒரு புத்தகத்தைவாசிக்கத் தொடங்கும் முன்பு இருக்கும்‘நான்’ வேறு. வாசித்து முடித்த பிறகுஇருக்கும் ‘நான்’ நிச்சயம் வேறானது
#பாவண்ணன்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை