Thursday, 17 January 2019

கார்த்திக் நேத்தா

ஒரு வழியாக 
நான் பிறந்து விட்டேன் .

பச்சிளங் குழந்தையின் 
கண்களைப் போல 
என் வாழ்க்கை ஒளிர்ந்து 
கொண்டிருப்பதை ரசிக்கிறேன் .

பிசின் சுரக்கும் 
இலைகளைப் போல 
கறை இல்லாத அன்பு 
என்னுள் சுரப்பதை உணர்கிறேன் .

அமைதியின் மேல் விளையாடும் 
சிறு பறவையாக மாறி 
நான் குதூகலிக்கிறேன் .

சுய ஜீவிய பிரக்ஞை 
அழிந்து கொண்டிருப்பதை 
அவதானிக்கிறேன் .

ஆண்டனா கம்பி மேல் 
அமர்ந்திருக்கும் 
காக்கை போல 
என் தவறுகளின் மேல் அமர்ந்து 
வெளிச்சத்தை 
கண்டு கண்டு களிக்கிறேன்.

பாறைக் குடிசையின் 
கதவைத் தட்டும் 
அலையாகி மிதக்கிறேன்

இப்போதெல்லாம் ,
யாராவது என்னைப் 
பார்த்தால் தான் 
கண்கள் திறந்து பார்க்கிறேன்.

-கார்த்திக் நேத்தா

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை